பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தினமும் மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று சர்மா நகர், பி.வி.காலனி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.2500ஆக உயர்த்தி தரப்படும். பெண்களுக்கு அரசு வேலை வய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். பேருந்தில் பயணம் செய்யும் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம் சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித் தரப்படும்.