திருமலை: தெலங்கானா மாநிலம், மகாபூபாபாத் மாவட்டம், பொட்லதாண்டாவில் உள்ள தனியார் மாந்தோப்பில் பனொட்டு யாகூப், பனொட்டு ராமு ஆகியோர் காவலாளிகளாக இருந்து வருகின்றனர். டோரூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஹர்சித் (13), சோகைல் (16) ஆகியோர், அம்மாபுரத்தில் உள்ள தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, வரும் வழியில் மாந்தோப்பில் நுழைந்து, மாங்காய்களை பறித்து சாப்பிட்டனர். இதை கண்ட காவலாளிகளான யாகூப்பும், ராமுவும் சிறுவர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர்.