அண்ணா சிலைக்கு தீ வைப்பு: தலைவர்கள் கண்டனம்

சென்னை: அண்ணா சிலைக்கு தீ வைக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்): கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது. அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி எரிந்து, சிலை கருகி இருக்கிறது. இந்த இழிவான செயலில் ஈடுபட்ட காவிக் கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளை அவமதிக்கும் போக்கு தொடர்வதற்கு சனாதனக் கும்பல்களின் தூண்டுதலே காரணம். இதற்கு சட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடியை தருவார்கள். டிடிவி தினகரன் (அமமுக): கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைத்த விஷமிகளை, போலீசார் கண்டறிந்து அவர்கள் தகுந்த தண்டனை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: