தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி, தினமும் பொதுமக்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் பட்டாசு வெடித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்று மாலை அனகாபுத்தூர் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடம் வேட்பாளர் பேசுகையில், அனகாபுத்தூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க, சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மூலமாக மெட்ரோ வாட்டர் திட்டத்தை கொண்டு வந்து, குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி நீர்த்தேக்க தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்துள்ளேன்.