சென்னை: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் சரஸ்வதிநகர் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம். ஓய்வு பெற்ற வனச்சரகர். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013ம் ஆண்டு எனது தாயார் வசித்து வந்த வீட்டை பிரிப்பது சம்பந்தமாக பிரச்னை எழுந்தது. இதுதொடர்பான புகாரில் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ரவி, என்னை விசாரணைக்கு அழைத்தார். இது சிவில் விவகாரம் என தெரிந்தும் எனக்கு பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுத்தார். இந்நிலையில் போலீசார் உதவியுடன் வீட்டின் ஒரு பகுதி பூட்டு உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக நான் அளித்த புகாரை இன்ஸ்பெக்டர் வாங்க மறுத்து விட்டார். எனவே இன்ஸ்பெக்டர் ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.