காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனல், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியது. அப்போது வெளிநாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த இன்ஜினியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தாலும், சென்னையை ஒட்டிய பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் பாதிப்படைந்தது.