தங்கவயல்: வெங்கடேச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளை அகற்றி கொண்டு, வியாபாரிகள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். தங்கவயலில் புகழ் பெற்ற பிரசன்ன லட்சுமி வெங்கடேச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் நடக்கும் ரத உற்சவங்களில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பார். இதனால் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் ரதோற்சவத்தை முன்னிட்டு, தேர் வலம் வரும் ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையின் இரு ஓரங்களிலும் தற்காலிகமாக கடைகளை அமைப்பது வழக்கம்.