சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தலைவருமான நல்லக்கண்ணு கொரோனா தொற்று காராணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கொரோனா தொற்று பாதித்த நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். வயது மூப்பு காரணமாக இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. அவருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது.