சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா கிழக்கு தாம்பரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி அவரை வரவேற்றனர். திரண்டிருந்த மக்கள் மத்தியில் சின்னையா பேசுகையில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் தாம்பரம் கேம்ப் ரோடு சந்திப்பில் தேர்தல், என்னை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகிறார். அவருக்கு பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். விலையில்லா வாஷிங் மிஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீத கட்டணம். ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே வந்து வழங்கும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ₹1500 வழங்கும் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,’ என்றார்.