சென்னை: சவுகார்பேட்டையில் நகைப்பட்டறை ஊழியர்கள் 22 பேர், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சவுகார்பேட்டையில் வடமாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நகைப்பட்டறை உள்ளது. இங்கு மேற்குவங்கத்தை சேர்ந்த 54 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி 5வது மண்டல சுகாதார அதிகாரி மாப்பிள்ளை துரை தலைமையிலான குழுவினர், நகைப்பட்டறை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.