ஒரே நாளில் 2,342 பேருக்கு கொரோனா: 16 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பெற்று வந்த 16 பேர் உயிரிழந்தனர். தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 83,154 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 8,84,094 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,463 பேர்  குணமடைந்தனர். இதுவரை 8,56,548 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு 16 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,700 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,846 ஆக உள்ளது. நேற்று சென்னை 874 பேர், கோவை 207 பேர், செங்கல்பட்டு 242 பேர், தஞ்சாவூர் 114, காஞ்சிபுரம் 100 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: