சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பெற்று வந்த 16 பேர் உயிரிழந்தனர். தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 83,154 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 8,84,094 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,463 பேர் குணமடைந்தனர். இதுவரை 8,56,548 பேர் குணமடைந்துள்ளனர்.