சென்னை: ரெப்கோ வங்கி மூலமாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுத்து நிறுத்த கோரி அந்த வங்கியின் முன்னாள் இயக்குநர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்திருக்கிறார். தமிழகத்தில் ரெப்கோ வங்கி மூலமாக அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் அந்த வங்கியின் முன்னாள் இயக்குனர் லிங்கம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பர்மா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ரெப்கோ வங்கி, தற்போது அதிமுகவின் கட்சி வங்கியாக மாறி இருப்பதாக தெரிவித்தார்.