நீலகிரி: உதகையில் பாஜக தேர்தல் அறிக்கைக்கு பதிலாக அதிமுக தேர்தல் அறிக்கையை கொடுத்து அக்கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்து வருவது சலசலப்பை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இந்நிலையில், உதகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை கொடுத்து பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. உதகை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் போஜராஜன் என்பவரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.