ஆம்பூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களில் கிருமிநாசினி தெளிப்பு

ஆம்பூர் : ஆம்பூர் நகரில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகள் மையங்களில் கிருமிநாசனி தெளிக்கும் பணி நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் வருகிற 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அந்தந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம், இருக்கைகள், கழிப்பறை மற்றும் கட்டிடங்கள் ஆகியவை சரி செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த வாக்குச்சாவடிகள் உரிய அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

ஆம்பூர் நகராட்சி பகுதிகளில்  கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பன்னீர்செல்வம் நகர் நடுநிலைப்பள்ளி, மஸ்ருல் உல்லூம் கல்லூரி, ஆசனாம்பட்டு நகராட்சி பள்ளி, சான்றோர்குப்பம் நகராட்சி பள்ளி, ஐஇஎல்சி அரசு உதவி பெறும் பள்ளி, இந்து மேல்நிலைப்பள்ளி  ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் தலைமையில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அதன் சுற்று புறங்கள் தூய்மை படுத்தப்பட்டது. இதில், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: