பாணாவரம் : பாணாவரம் காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வழிதவறி வந்த 2 மான்கள், அன்வர்திகான்பேட்டை கடைவீதியில் அங்கும், இங்கும் நேற்று காலை சுற்றிக்கொண்டு இருந்துள்ளன.இதனை பார்த்த அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் புள்ளி மான்களை பிடிக்க முயன்றனர். அதில், ஒரு மான் பிடிப்பட்டது, மற்றொரு மான் அங்கிருந்து தப்பி சென்றது.