சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று காலை 7 மணிக்கு லைட் அவுஸ் அருகில் இருந்து சைக்கிளில் சென்று பிரசாரம் செய்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதைத்தொடர்ந்து மக்களை வீடு வீடாக சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும், 125வது வட்டத்தில் உள்ள அம்பேத்கர் பாலம், ஏகாம்பரம் பிள்ளை தெரு, மீனாம்பாள் பிள்ளைதெரு, ஆறுமுகம் பிள்ளை தெரு, நைனார் நாடார் தெரு, கைலாசபுரம், காரணீஸ்வரர் கோயில் தெரு, பி.வி. கோயில் தெரு, பாட்ஷா தோட்டம், நொச்சிக்குப்பம், நொச்சி நகர், மற்றும் மாலை 125வது (அ) வட்டத்தில் டும்மிகுப்பம், குயில் தோட்டம், ஜோசப் காலணி, மல்லிமாநகர், அப்பு தெரு, முத்துகிருஷ்ணன் தெரு, பஜார் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு, அருண்டேல் தெரு, போலீஸ் குடியிருப்பு, தபால் ஊழியர் குடியிருப்பு, மத்தள நாராயணன் தெரு, மாங்கொல்லை நடுத்தெரு, சாலை தெரு ஆகிய பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.