துரைப்பாக்கம்: மதுரவாயல் சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(21). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் வெங்கட்ராமன்(18) என்பவருடன் பைக்கில் முட்டுகாடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கானத்தூர் கலைஞர் நகரை சேர்ந்த வடிவேலு(34) என்பவர் எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்தார். முட்டுக்காடு படகு குழாம் அருகே வந்தபோது, இருவரின் பைக்கும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாயின. இதில், முருகனும், வடிவேலுவும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். வெங்கட்ராமன் பலத்த காயமடைந்தார்.