திருவில்லிபுத்தூர்: திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று செப்பு தேரோட்டம் நடந்தது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆண்டாள், ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்புள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெறுகிறது.