காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்றும், நாளையும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக 3 மாவட்டங்களில் இன்னும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று வேகமாறுபாட்டின் காரணமாக நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட காலநிலை நிலவும். வரும் 27 முதல் 29 வரை தமிழகம் மற்றும் புதுவை-காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட காலநிலையே நிலவும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஷியசும், குறைந்த அளவாக 25 டிகிரி செல்ஷிசும் வெப்பநிலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: