கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பவுல்டர் நகரில், ‘கிங் சூப்பர் மார்க்கெட்’ இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இதில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்களை சிறை பிடித்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த கடையை சுற்றி வளைத்தனர். அந்த நபரை சரண் அடைந்து விடும்படி எச்சரித்தனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத அந்த நபர், சூப்பர் மார்க்கெட்டில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து பலியாகினர். இதனை தொடர்ந்து, அதிரடியாக செயல்பட்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.