கோவை புலியகுளம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளருமான கமல்ஹாசன் பேசியதாவது: இடஒதுக்கீடு மூலம் ஜாதி வெறி இன்னும் அதிகரிக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால், இடஒதுக்கீடு தேவையில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப வாழ்வில் ேமலே வர வேண்டும். இதற்கு கடின உழைப்பு ேதவை. குறைந்த மதிப்பெண் பெற்றாலும், நமக்கு இடஒதுக்கீடு மூலம் சீட் கிடைத்துவிடும் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாணவர்கள் வாழக்கூடாது.