தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா துர்கம் கோயில் திருவிழாவையொட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துக்கோட்டையில், மல்லிகார்ஜூனா துர்கம் தேர்திருவிழாவை முன்னிட்டு, எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஆனெக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளை உரிமையாளர்கள், காளைகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட தட்டிகளை கட்டி ஓட விட்டனர்.