ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்: சா.மு.நாசர், எம்.பூபதி கூட்டறிக்கை

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் ஆவடி தொகுதியில் வேட்பாளராக ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி தொகுதியில் வேட்பாளராக ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளராக வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி  தொகுதியில் வேட்பாளராக திருத்தணி எஸ்.சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருநின்றவூரில் திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் இன்று (21ம் தேதி) மாலை 5 மணியளவில் வாக்கு சேகரிக்கிறார்.

எனவே, இந்த பிரசார கூட்டத்தில் திருவள்ளூர் மத்திய, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி  பிரதிநிதிகள், கிளை, வார்டு, வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: