கறம்பக்குடி: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தச்சன்குருச்சி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் நகைகள் இருந்தது. இதனால் காரை இயக்கி வந்த மோகன் மற்றும் மற்றொரு நபரிடம் விசாரித்தனர்.