வழக்குகள் மறைப்பு: அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைப்பு

சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார்; எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் சைதாப்பேட்டையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: