தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: கோடைகலத்தில் பொதுமக்கள் மற்றும் சிலர் மாநகராட்சி குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் குப்பையை எரிப்பதால் பல இடங்களில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கோடைகாலத்தில் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வியாசர்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பால நாகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்  பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன்  தெரு, பி பி ரோடு, மாதவரம் ஹை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: