குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து. ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் தலைமை வகிக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கரிக்காலி கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு கடந்த 2.3.2021 அன்று குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டது. சட்டப்படி பெறப்பட்ட பட்டாவை எவ்வித சட்ட விதிகளையும் பின்பற்றாமல், ஆளுங்கட்சியினரின் தலையீடு காரணமாக தாசில்தார் சிவபாலன் திடீரென 8.3.2021 அன்று பட்டா மாறுதலை ரத்து செய்துள்ளாளர்.