திருவள்ளூர்: காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுக விரிவாக்க பணிகளை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் பலராமனை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொன்னேரி மீனவ மக்களின் நலன் கருதி, மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம் எந்த நிலையிலும் விரிவாக்கம் நிரந்தரமாக செய்யப்படாது என்று உறுதி அளித்தார்.