மதுரை: கர்ணன் பட பாடல் வரிகளை நீக்கக் கோரிய வழக்கில் தயாரிப்பாளர், இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்கும் ‘‘கர்ணன்’’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதிலுள்ள ஒரு பாடல் வரி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாழ்வாகவும், தவறாகவும் குறிப்பிடும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரம், ஆண்டிப்பண்டாரம், ஜங்கம், யோகீஸ்வரர் சமுதாயத்தினரின் உணர்வுகளையும், நன்மதிப்பையும் கெடுக்கும் வகையில் உள்ளது.