பெங்களூரு: அரசியலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை இளைஞர்களால் மட்டுமே மாற்ற முடியும் என்று சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி கூறினார். பெங்களூரு பனசங்கரி கெம்பேகவுடா பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் பேசும்போது கூறியதாவது, ``நமது சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் என்று இரண்டு தரப்பினர் இருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டுக்கு பிறகு ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் எண்ணிக்கை குறைந்து இருக்கவேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் ஏழைகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டது. பணம் படைத்தவர்கள் தொடர்ந்து அதிக வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.