உடுமலை: தலைமை ஆசிரியரின் முயற்சியால் குமரலிங்கம் அரசுப்பள்ளி நவீனமயமாகி வருகிறது.உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கிராமப்புற மாணவர்கள் 769 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் இரவுக் காவலர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்ததால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக பள்ளி வளாகம் மாறியது.இதையடுத்து, தலைமை ஆசிரியர் மாரியப்பன் தனது சொந்த செலவில் சுற்றுச்சுவரை செப்பனிட்டார். மேலும் ஆசிரியர்களிடம் நிதி உதவி பெற்று விழா மேடை அமைத்தார்.