52 வது முறையாக களமிறங்கும் தேர்தல் மன்னன்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட நேற்று தேர்தல் மன்னன் நாகூர்மீரான் பீர்முகம்மது வேட்புமனு தாக்கல் செய்தார். நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் பகுதியை சேர்ந்த இவருக்கு வயது 61. இவர் தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தன்னிடம் அசையும் சொத்தாக ரூ.50 ஆயிரம் இருப்பதாகவும், அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது கல்வி தகுதி 6ம் வகுப்பு என்றும் தெரிவித்துள்ளார். போட்டோகிராபராக பணியாற்றி வந்த இவர் பின்னர் அரசியலில் ஈர்க்கப்பட்டு சட்டமன்ற, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டு பல்வேறு தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ளார். நேற்று கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். அவர் போட்டியிடுவது இது 52 வது முறையாகும். நாங்குநேரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கடைசியாக இவர் போட்டியிட்டார்.

Related Stories: