பைக் மீது டிப்பர் லாரி மோதி மனைவி கண்முன் கணவர் இரண்டு குழந்தைகள் பலி

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா மாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்(35). இவரது மனைவி சங்கீதா(30). இவர்களது மகன் தருண்(6). மகள் தனுஜாஸ்ரீ(3). இவர்கள் நேற்று சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருப்பாச்சூர் அருகே சர்வீஸ் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் சங்கீதா கண்முன் ஜெகதீஷ் மற்றும் மகன் தருண், மகள் தனுஜாஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மூவரின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயமடைந்த சங்கீதாவை மீட்டுஅதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: