வால்பாறை : வால்பாறையில் குடியிருப்பில் புகுந்த சிறுத்தை, ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கக்கன்காலனி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர், 5 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கக்கன்காலனியில் புகுந்த சிறுத்தை ஒன்று, ராஜேந்திரன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில், ஒரு ஆடு பலியானது. மற்றொரு ஆடு படுகாயம் அடைந்தது. மற்ற ஆடுகள் கத்தியபடி ஓடியது.