உ.பி.யில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் எத்மதவுலா பகுதியில் இன்று காலை லாரி மற்றும் கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் உயிரிழந்த 8 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான லாரி நாகலாந்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காரின் பதிவு எண் ஜார்க்கண்டில் பதிவு செய்யப்பட்டு என போலீஸ் சூப்பிரெண்டு தகவல் தெரிவித்தார். மேலும் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என பேட்டியளித்தார்.

Related Stories: