உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் எத்மதவுலா பகுதியில் இன்று காலை லாரி மற்றும் கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.