நம்பிக்கை வாக்கெடுப்பு அரியானாவில் பாஜ அரசு தப்பியது

சண்டிகர்: அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சமீபத்தில் ஆதரவைத் திரும்பப் பெற்றனர். இதனால், ஆளும் பாஜ அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக காங்கிரஸ் தரப்பில் சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவையில் நேற்று நடந்தது. இதில், பாஜ - ஜனநாயக ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக 55 ஓட்டுகளும், எதிராக 32 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆளும் பாஜ அரசு தப்பியது.

Related Stories: