பெங்களூரு: மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மகளிர் காவல்நிலையம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மட்டத்திலும் பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மகளிர் காவல்நிலையம் அமைக்கப்படும்.