ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.39 லட்சம் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.39 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெட்ரோல் பங்க் ஊழியரிடம் சோதனை நடத்தப்பட்டது.

அந்த நபர் வாகனத்தில் வைத்திருந்த 4 லட்சத்து 39 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்ரோல் பங்க் வங்கி கணக்கில் வரவு வைக்க கொண்டுசெல்லப்பட்டதாக அவர் விளக்கமளித்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: