கோவை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பரவல் கட்டுக்குள் வந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.