சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் 13-இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒதுக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து போட்டியா? என ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறலாமா எனவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.