சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டிடிவி.தினகரன்(அமமுக): உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்மையைப் போற்றுகின்ற இந்நன்னாளில் மாதர் குலத்திற்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள். பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள்): இந்தியாவில் பாஜ ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மகளிர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்களது உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகின்றன. மகளிர் உரிமையைப் பாதுகாக்க சனாதன சக்திகளை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய அனைத்துலக மகளிர் நாளில் சூளுரை ஏற்போம்.