திருச்சி விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி:சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றுமுன்தினம் காலை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் புனவாசலை சேர்ந்த  மணிமாறன், ஒரத்தநாட்டை சேர்ந்த செந்தில் ஆகியோரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் தனியே அழைத்து சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது இருவரும் உடலில் மறைத்து  தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.73.48லட்சம் மதிப்புள்ள 1596 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: