பூந்தமல்லி: போரூரில் இலவச லேப்டாப் வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் லேப்டாப் வழங்கவில்லை என்று மாணவ மாணவிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், போரூர் அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017 - 2018ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை என கூறப்படுகிறது.