தாம்பரம்: தமிழகத்தில் பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரங்கநாதபுரம், கஸ்தூரிபாய் நகர், காந்தி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் துணை ராணுவத்தினர் நேற்று அணிவகுப்பு நடத்தினர்.