சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவு: சோமங்கல துணை நதி முதல் அடையாாறு ஆறு வரை வெளிவட்ட சாலை வழியாக புதிதாக 4 மீட்டர் உயரத்தில் 2 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்படுகிறது. திறந்த வெளி கால்வாயில் 380 மீட்டர் நீளத்தில் கைப்பிடி தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. ரெகுலேட்டர் ஒன்றும் அமைக்கப்படுகிறது. அடையாற்றில் குறிப்பிட்ட தூரம் வரை 2 மீட்டர் ஆழப்படுத்தப்படுகிறது. அடையாற்று தண்ணீர் செல்ல வசதியாக திருநீர் மலை பகுதியில் பாறைகள் அகற்றப்படுகிறது. மேலும், வெள்ளபாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர் உயர்த்தப்படுகிறது.