திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் முன்னாள் முதல்வரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. சிவசங்கருக்கு வழங்கிய ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், சிவசங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.