திமுக-மார்க்சிஸ்ட் கட்சி இன்று மீண்டும் பேச்சு

சென்னை: திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகளுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைந்துள்ள குழுவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று காலை மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைெபற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: