விழிப்புடன் இருங்கள்...! நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..! கடந்த 24 மணி நேரத்தில் 16,838 பேர் பாதிப்பு: 113 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.57 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.11 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 16,838 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,761 ஆக உயர்ந்தது.

* புதிதாக 113 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,548 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 16,838 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,08,39,894 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,76,319 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில் 1,80,05,503 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* குணமடைந்தோர் விகிதம் 97.01% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.41% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.58% ஆக குறைந்துள்ளது.

Related Stories: