சகோதரியுடன் காதல் நண்பன் படுகொலை: வாலிபர் கைது

நொய்டா: எதிர்ப்பையும் மீறி சகோதரியுடன் காதல் நெருக்கம் காட்டிய நண்பனை படுகொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். நொய்டா அருகே  உள்ள பாடல்பூர் போலீஸ்நிலைய பகுதிக்கு உட்பட்ட அச்சேஜா கிராமத்தை சேர்ந்தவர்கள் தீபக் மற்றம் விபின். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.  இந்தநிலையில் தீபக் தனது நண்பன் விபினின் சகோதரியுடன் ெநருங்கி பழகி வந்தார். இருவரும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.  இதை அறிந்த விபின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது நண்பனை கண்டித்தார். ஆனால் கேட்காததால் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும்  பகுதியில் வைத்து தீபக்கை படுகொலை செய்தார். இந்த படுகொலை காட்சிகள் இணையதளத்தில் வைரலானது. இதையடுத்து போலீசார் நடவடிக்கை  எடுத்து விபினை கைது செய்தனர்.

Related Stories: