கோலார்: ஒருவர் செவி திறன் இல்லாமல் இருப்பது குடும்ப சாபம் என்பதை ஏற்க முடியாது. மருத்துவ முறையில் இயற்கையாக இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாக தேவராஜ் அரஸ் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய துணைவேந்தர் பிரதீப்குமார் தெரிவித்தார்.சர்வதேச செவிதிறன் குறைபாடு மற்றும் தடுப்பு தினம் முன்னிட்டு மருத்துவ கல்வி ஆராய்ச்சி மையத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசும்போது, நாட்டில் பத்து பேரில் ஒருவருக்கு செவிதிறன் குறைப்பாடு உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களில் இரைச்சல், புகை, ஒலி மாசு உள்பட பல காரணங்கள் உள்ளது. சிலருக்கு உடலில் ஏற்படும் மாற்றமும் காரணமாகவுள்ளது.